வியூகம் நிறைந்த இரு வழி ஒத்துழைப்புக்கு இணக்கம்

மலேசியாவும், ஜப்பானும் வியூகம் நிறைந்த கூட்டு பங்காளித்துவ ஒத்துழைப்புக்கு இன்று இணக்கம் கண்டன. ஜப்பானுக்கு ஐந்து நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று காலையில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா- வை சந்தித்தப் பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.

அன்வாருக்கும், ஃபுமியோ கிஷிடா- விற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்கு முன்னதாக மலேசிய விண்வெளி ஏஜென்சி மற்றும் ஜப்பானின் பரவெளி ஏஜென்சி ஆகியவற்றுக்கு இடையில் விண்வெளி செயலியை மேம்படுத்துதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்