கடந்த வெள்ளிக்கிழமை, பாகான் டத்தோ, ருங்குப் அருகே உள்ள Kampung Parit, Sungai Sumun என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்றதாக நம்பப்படும் இரண்டு மியான்மர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நள்ளீரவு 1.00 மணி அளவில் அந்த ஆடவர்கள் சந்தேகிக்கும் படியான நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பொது மக்களால காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களிடம் முறையான அடையாள ஆவணமும் இல்லை என ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர், Asisten Komisioner Ahmad Adnan Basri தெரிவித்தார்.