ஜோகூர் சுல்தான் புறப்பாடு – ஆராவாரத்தில் 30 ஆயிரம் பேர்

ஜனவரி 31 ஆம் தேதி, ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் 17 வது மாமன்னராக ஆட்சி பீடத்தில் அமர இருக்கிறார்.

அதனை ஒட்டி அன்றைய நாள் தமது Bukit Serene மாளிகையில் இருந்து புறப்பட இருக்கிறார். அவரது உறப்பாட்டைக் கொண்டாட Bukit Serene மாளிகையில் இருந்து செனாயில் உள்ள Hangar Diraja வரையில் உள்ள சாலையின் இரு புறமும் , ஜோகூர் மக்கள் 30 ஆயிரம் பேர் திரள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுமார் 35.5 கிலோ மீட்டர் சாலை காலை 7.45 முதல் மூடப்படும் என ஜோகூ போலீஸ் தலைவர் CP M Kumar தெரிவித்தார்.

ஜோகூர் சுல்தான் புறப்பாட்டை ஒட்டி சுமார் ஆயிரத்து 200 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். Bukit Serene மாளிகையில் இருந்து செனாயில் உள்ள Hangar Diraja வரையில் ஜோகூர் சுல்தானின் பயணம் சுமார் ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது எனவும் CP M Kumar குறிப்பிட்டார்.

+

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்