தோட்டக்காரர் ஒருவர், தனது வீட்டின் பின்புறம், கையெறி குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளார். மலாக்கா, ஜாசின், Serkam – மில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, 60 மில்லி மீட்டர் நீளமுள்ள அந்த வெடிகுண்டு, மண்ணில் செறுகிக்கொண்டு இருந்தைக் கண்டு, போலீசுக்கு தகவல் அளித்துள்ளார் என்று Jasin மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Jamil Radzi தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஜாசின், பொது தற்காப்பு படையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் வீட்டின் பின்புறம் கிடந்த இந்த வெடிகுண்டைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
காலை 11.45 மணியளவில் அந்த வீட்டுப்பகுதிக்கு விரைந்த மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர், Unexploded Ordinance வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டனர். பரிசோதனைக்காக அந்த வெடிகுண்டு, போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Ahmad Jamil தெரிவித்தார்.