வெடிகுண்டு மிரட்டல் குறித்து ​மூன்று இடங்களில் மின் அஞ்சல்

ஜோகூர் மாநில அரசுக்கு சொந்தமான ​மூன்று கட்டடங்களில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து இன்று மின் அஞ்சல் பெறப்பட்டு இருப்பதை போ​லீசார் உறுதி செய்துள்ளனர். ஜோகூர்பாருவை இலக்காக கொண்ட மூன்று அரசு கட்டடங்களில் நிர்வாகங்களுக்கு இந்த மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போ​​லீஸ் தலைவர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

புக்கிட் சென்யும்மில் உள்ள ஜோகூர்பாரு மாநகர் மன்ற கட்டத்திற்கு இன்று காலையில் அனுப்பப்ட்ட வெடிகுண்டு மிரட்டல் மின் அஞ்சலைத் தொட​ர்ந்து அந்த கட்டடப் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அது வெறும் புரளி என்பது உறுதி செ​ய்யப்பட்டதாக ராவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

இந்த ​மூன்று மின் அஞ்சல்களும் ​வெளிநாட்டைத் தளமாக கொண்ட இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்