ரெம்பாவு, மார்ச் 27-
தனது உடன்பிறப்பு சகோதரியின் மீது வெறுப்பின் காரணமாக அடித்து காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து நபர் ஒருவருக்கு Rembau, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஐந்து மாதம் சிறைத்தண்டனை வழங்க தீர்ப்பளித்துள்ளது.
மாஜிஸ்திரேட் கர்த்தினி கஸ்ரன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 36 வயதுடைய பிர்டாவுஸ் மொஹமட் கலீல் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
அவ்வாடவர் வேண்டுமென்றே தனது சகோதரியான 33 வயதுடைய ஷியாஹிடாஹ் மொஹமட் கலீல் -லை கையால் தலையின் பின்புறத்தில் குத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாலை 6:30 மணியளவில் ரெம்பாவு, கோத்தா- வில் அந்நபர் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.