கோலாலம்பூர் ஏப்ரல் 4 –
கோலாலம்பூர் மாநகரில் லஞ்ச ஊழலில் சிக்கியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மின் முழு அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி, வேறு இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்று கோலாலபூர் போலீஸ் தலைவர் டத்துக் ருஸ்டி மொகமாட் இசா தெரிவித்தார்.
கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவில் துணை சுப்ரின்டென்டன் பதவி வகிக்கும் அந்த உயர் அதிகாரி ஸ்.பி.ர்.ம் விசாரணைக்கு பின்னர் தற்போது ஜாமீனில் இருப்பதாக டத்துக் ருஸ்டி குறிப்பிட்டார்.
இதுவரையில் ஸ்.பி.ர்.ம் மிடமிருந்து தாங்கள் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை என்று மேலும் கூறினார்.