ஷரியா சட்டம் தொடர்பில் கூட்டரசு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை “கருப்பு வெள்ளிக்கிழமை” என்று பிரகடன்படுத்திய பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Takiyuddin Hassan, அவ்வாறு கூறிய தனது நிலைப்பாட்டை தற்காத்துப் பேசினார்.
இம்மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பில், கிளந்ந்தான் மாநில அரசாங்கம் அமல்படுத்தி வரும் 2019 ஆம் ஆண்டு ஷரியா குற்றவியல் சட்டத்தில் 18 விதிகளில் 16 விதிகள் செல்லத்தக்கவை அல்ல என்றும் அவை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் கூட்டரசு நீதிமன்றம் அறிவித்தது.
இத்தீர்பபு அளிக்கப்பட்ட தினத்தை ஒரு கருப்பு வெள்ளிக்கிழமை என்று அறிவித்த முன்னாள் அமைச்சரான Takiyuddin Hassan- னை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah கண்டித்துள்ளார்.
எனினும் தாம் அவ்வாறு கூறிய நிலைப்பாட்டை தற்காப்பதாக Takiyuddin Hassan திட்டவட்டமாக தெரிவித்தார். வழக்கில் நான் தோல்வி அடைந்தால் அதனை கருப்பு தினம் என்றே நான் கூறுவேன்.அந்த தீர்ப்பு திங்கட்கிழமை அறிவித்து இருந்தாலும் அது கருப்பு திங்கட்கிழமை என்றே வர்ணித்து இருப்பேன் என்று கோலாலம்பூரில் சீனப் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அந்த மதவாத கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.