ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை விரைவில் முடிவுறும்

கோலாலம்பூர், மஅர்ச் 5 –

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை விரைவில் முடிவுறும் என்று போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை உயர்த்துவது கட்டாயமாகும் என்ற தலைப்பில் ஹாடி அவாங் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் போலீசார் அவரை விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை முடிவுற்றப்பின்னர் மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்படும் என்று தான் ஶ்ரீ ராசாருடின் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்