மலேசியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்கள் ஆர்வம்

மெல்போர்ன், மார்ச் 5 –

மலேசியாவில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் அதீத ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தற்போது மலேசியாவுடன் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் கொண்டுள்ள 2,450 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு மெல்போர்ன் சென்றுள்ள பிரதமர் அன்வார், தமது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, மலேசியாவில் முதலீடு செய்வதற்கு ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தை கண்டறிய முடிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்