104 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்கிய ஆடவர்

சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், மனைவியை பாராங் முனையில் மிரட்டியதாக தொழிலாளர் ஒருவர், மொத்தம் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மலாக்கா, Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி Azaraorni Abdul Rahman முன்னிலையில் நிறுத்தப்பட்ட 38 வயதுடைய அந்த தொழிலாளிக்கு எதிராக மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

தனது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது உட்பட அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பில் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

தவிர தமது மகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு தனது மனைவியை பாராங் முனையில் மிரட்டியதாக அந்த நபர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் மலாக்கா, அலோர் காஜா, Durian Tunnggal, Kampung Gangsa, Jalan Keretapi Lama- வில் இக்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்