அரச மலேசிய போலீஸ் படையில் தங்களின் சிறப்பான அடைவு நிலை பங்களிப்புக்காக 10 ஆயிரத்து 413 பேர்,ஏ.பி.சி எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்று கெளரவிக்கப்பட்டுள்ளனர். .
அரச மலேசிய போலீஸ் படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கோட்டா முறையான 8 விழுக்காடு அடிப்படையில் இந்த ஏ.பி.சி விருதுகள் வழங்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஏ.பி.சி விருதளிப்பு விழா இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய போது ஐஜிபி இவ்வாறு குறிப்பிட்டார்.
APC விருது பெற்றவர்களில் 1,068 பேர், போலீஸ் உயர் அதிகாரிகள் என்றும் 8,376 பேர் கீழ் நிலை அதிகாரிகள் என்றும் எஞ்சியர்கள் பொதுச் சேவை துறையைச் சார்ந்தவர்கள் என்றும் தான் ஶ்ரீ ராசாருடின் விளக்கினார்.