140 அடி உயர முருகப் பெருமானின் 8 ஆம் ஆண்டு பன்னீர் அபிசேக விழா 01.01.2024, திங்கட்கிழமை

பேரன்புடைய பக்த பெருமக்களே! நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் மார்கழி மாதம் 16 ஆம்நாள் (ஆங்கிலம் 01.01.2024) திங்கட்கிழமை கிருஷ்ண பட்ச பஞ்சமி திதியும்,பூரம் நட்சத்திரமும்,கூடிய சுபயோக சுபதினத்தில், 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிசேகம் நடைபெறும்.காலை 9.00 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூசைக்குப் பின் பக்தர்கள் அனைவரும் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிசேகம் செய்யலாம்.

பக்த பெருமக்களும்,அன்பர்களும் பொது மக்களும் திரளாக வருகை தந்து திருமுருகனின் திருவடிக்கு பன்னீர் அபிசேகம் செய்து இறையருள் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்