பள்ளிகள் தொடங்கப்படும்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா 150 வெள்ளி உதவித் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்ப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக துணை கல்வி அமைச்சர் lim Hui ying தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித் தொகையை வங்கியிலிருந்து மீட்ட தலைமையாசிரியரிடமிருந்து ஒரு லட்சம் வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.
எனினும், அந்த 150 வெள்ளியை மீட்பதற்கு மாணவர்கள் சார்பில் பெற்றோர்கள் வங்கிக்குச் செல்வதற்கு ஏற்படகூடிய செலவுகள் மற்றும் சிரமங்களையும் இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று துணை அமைச்சர் lim hui ying தெரிவித்தார்.