அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பாஸ் கட்சி கைப்பற்றுவது உறுதி என்று அந்த மதவாத கட்சி அறிவித்துள்ளது.
பொருளியல் வளர்ச்சியில் போட்டியிடத்தக்க ஒரு மாநிலமாக சிலாங்கூரை பாஸ் கட்சி உருவாக்கும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Zurk Ahmad தெரிவித்தார்.
சிலாங்கூரை கைப்பற்றுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படும் என்று மாநிலத்தின் புதிய தலைவர் Abdul Halim Tamuri உறுதி கூறியிருப்பதைத் தொர்ந்து சிலாங்கூரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூரை பாஸ் கைப்பற்றுமானால் மலாய்க்காரர்கள், சீனர்கள்,இந்தியர்கள் மற்றும் இதர இனத்தைச் சேர்ந்த தலைவர்களுன் இணைந்து மேம்பாடு மிக்க மாநிலமாக உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.