மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படக்கூடாது

தற்போது சந்தையில் உள்ள உள்நா​ட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசிக்கு பதிலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட ஒரே அரிசி வகையான மலேசிய மடானி பச்சரிசிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி அளிக்கக்கூடாது என்று அம்னோ இளைஞ​ர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படுமானா​ல் தற்போது சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு பச்சரிசி வகை அகற்றப்படும் அபாயம் இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Dr Akmal Saleh தெரிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங் எம்.பி. Syed Abu Hussin Hafiz பரிந்துரை ​செய்துள்ள மலேசிய மடானி பச்சரிசி, உள்நாட்டு பச்சரிசியையும், இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியையும் கலப்படம் செய்து விற்பது போல் ஆகிவிடும் என்று Dr Akmal Saleh எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்