தற்போது சந்தையில் உள்ள உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பச்சரிசிக்கு பதிலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட ஒரே அரிசி வகையான மலேசிய மடானி பச்சரிசிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதி அளிக்கக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசிய மடானி பச்சரிசி அனுமதிக்கப்படுமானால் தற்போது சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு பச்சரிசி வகை அகற்றப்படும் அபாயம் இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Dr Akmal Saleh தெரிவித்துள்ளார்.
புக்கிட் கந்தாங் எம்.பி. Syed Abu Hussin Hafiz பரிந்துரை செய்துள்ள மலேசிய மடானி பச்சரிசி, உள்நாட்டு பச்சரிசியையும், இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியையும் கலப்படம் செய்து விற்பது போல் ஆகிவிடும் என்று Dr Akmal Saleh எச்சரித்துள்ளார்.