டுங்கூன், பந்தாய் ரந்தாவ் அபாங் அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் மூன்று நண்பர்களுடன் குளிக்க சென்ற 16 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
முஹம்மது ஹஸ்ரி எசானி அப்துல்லா என்கிற அம்மாணவனின் உடல் நேற்று மாலை 6.10 மணியளவில் மீட்புபடையினரால் மீட்கப்பட்டதாக டுங்கூன் தீயணைப்பு, மீட்புப்படை தலைவர் ஷரிசல் ஷம்சுதீன் தெரிவித்தார்.
நான்கு மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மாணவனின் உடல் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஷரிசல் ஷம்சுதீன் கூறினார்.