17 வயது மாணவனுடன் ஆசிரியை காதல் ஆசிரியர் நன்னெறி கோட்பாட்டிற்கு முரணானது

சிப்பாங், மார்ச் 25.

தன்னிடம் பயின்று வரும் 17 வயது மாணவன் ஒருவனுடன் இடைநிலைப்பள்ளி ஆசிரியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது, மிகப்பெரிய தவறாகும் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியையின் செயல், புனித மிக்க ஆசிரியர் தொழில்துறை நன்னெறி கேட்பாட்டிற்கு முரணானதாகும் என்று NUTP-யின் பொதுச் செயலாளர் பவுஜி சிங்கோன் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழில் துறையை சேர்ந்த ஒருவர் மாணவனுடன் காதல் வலையில் விழுந்து, தகாத உறவில் ஈடுபட்டு இருக்கும் சம்பவத்தை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கடுமையாக கருதுவதாக பவுஜி சிங்கோன் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் தொடர்பாக பல்வேறு புகார்களை NUTP பெற்று வந்த போதிலும் மாணவனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டை அறவே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பவுஜி சிங்கோன் தெரிவித்தார்.

ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையிலான தகாத உறவை அனுமதிப்போமானால் அது நாளடைவில் மாணவர், விரிவுரையாளர், மருத்துவர், நோயாளி என்ற நிலையில் தகாத உறவுக்கு வித்திடும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிப்பாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவர், அப்பள்ளியில் பயிலும் 17 வயதுடய தனது மகனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாக 46 வயது மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை சிப்பாங் மாவட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்