18 மாதக் குழந்தை நீரில் மூழ்கியது

கனோவிட், பிப்ரவரி 26 –

நங்கா கெர்மை, கனோவிட் ஆற்றில் 18 மாதக் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 6:16 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து கனோவிட் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக் தீயணைப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பாட்ரிக் கீலிங் பூனௌ என்கிற ஆண் குழந்தை ஆற்றின் அருகில் இருந்தபோது தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் குழந்தை அவ்விடத்தில் இருப்பது தெரியாது என்றும் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 8 மணியளவில் பாதுகாப்பு காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணி நிறுத்தப்பட்டதுடன், இன்று அதிகாலையில் அப்பணி மீண்டும் தொடரப்பட்டதாக அவர் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்