20 கிலோகிராம் போதைப்பொருள் உட்பட 9 பேர் கைது

கெடா, ஏப்ரல் 08-

கெடா, பாடாங் தெராப் -பில் உள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒன்பது பேர் உட்பட ஒரு தாய்லாந்து பிரஜையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சோதனையில் 7 லட்சத்து 30 ஆயிரத்து வெள்ளிக்கு அதிக மதிப்பிலான 20 கிலோகிராம் ஷாபு என்கிற போதைப்பொருள் மற்றும் 130 கிலோகிராம் கெத்தும் இலைகளை போலீசார் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கெடா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மேற்கொண்ட முதல்கட்ட சோதனையில் 52 வயதுடைய ஆடவர் நக்கா, கம்போங் லம்டின்-னில் கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ பைசால் சல்லெஹ் கூறினார்.

அடுத்தக்கட்ட சோதனையில் 26 முதல் 39 வயதுடைய ஆறு பேரை அன்றிரவு 11 மணியளவில் அவ்விடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பைசால் சல்லெஹ் தகவல் வெளியிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்