ஜோகூர் பாரு, மார்ச் 11 –
ஜோகூர்பாருவில் ஒழுங்கீன நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் முயற்சியாக கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்ட ஓப்ஸ் னோடா நடவடிக்கையில் லைசென்ஸ் இன்றி செயல்பட்ட 22 வர்த்தக வளாகங்களில் போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
இதில் 87 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 22 பேர் ஆண்கள் என்றும் 65 பேர் பெண்கள் என்றும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் ம். குமார் தெரிவித்தார்.
உடம்புபிடி என்ற போர்வையில் செயல்பட்ட நிலையங்களை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக குமார் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் மூலம் ஒழுங்கீன நடவடிக்கைக்கு பயன்படுத்தும் பொருட்களுடன் 8,789 வெள்ளி ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.