மின்சாரம் தாக்கி ஆடவர் உயிரிழந்தார்

சன்டாக்கான், மார்ச் 11 –

மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர், உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சபா, சண்டக்கான், கம்பூங் டாத்து பெங்கெரான் பாத்து 7 என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்து விரைந்து தீயணைப்பு, மீட்புப்படையினர், 18 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

மின்சார ஓட்டம் , பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு பாய்வதை தடுக்கும் பொருட்டு, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டப்பின்னர் அந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக சண்டக்கான் தீயணைப்பு, மீட்புப்டையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்