4 ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்

செதாப்பாக், மார்ச் 19 –

செதாப்பாக், மெலாவாத்தி யில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தங்க நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் ”டத்தோ” என்ற பட்டம் கொண்ட உள்ளூர் நபர் உட்பட நான்கு ஆப்பிரிக்க ஆண்களை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.

நகை மற்றும் உணவக உரிமையாளரான 27 வயதுடைய அந்நபரின் கடையில் இதுவே முதல்முறையாக நிகழ்ந்த சம்பவம் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் இசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில் நல்லதொரு லாபத்தை ஈட்டுவதற்கு பாதிக்கப்பட்ட ஆடவர் சந்தேகிக்கும் நபர்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது சந்தேகிக்கும் நபர்கள் கொள்ளையடித்து சென்ற பணம் எதுவும் இதுவரையில் கிடைக்க பெறவில்லை என்று மொகமாட் அசாம் ஓர் அறிக்கையில் இன்று கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்