நெகிரி செம்பிலான்ன், மார்ச் 19 –
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயண ஆவணமின்றி இருந்த 44 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெகிரி செம்பிலான், நீலாய் 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 149 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
22 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலாான் மாநில குடிநுழைத்துறை இயக்குநர் கேனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.
இந்த 44 பேரும் குடிநுழைவுத்துறை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.