மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்

கெடா, மார்ச் 19

கார் ஒன்றை மடக்கி, கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களில் ஒருவன், சம்பந்தப்பட்ட காரினால் மோதப்பட்டு உயிரிழந்தான். .

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.39 மணியளவில் குவாலா கெடா வில் மருந்தகம் ஒன்றின் முன்புறம் நிகழ்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன், காரை மடக்கி, காரின் முன் கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். .

கொள்ளையனை கண்ட அதிர்ச்சியில் தப்பிக்க முற்பட்ட ஆடவர், தனது காரை திடீரென்று வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது அக்கார், கொள்ளையனை மோதி தள்ளியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அகமாட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களுக்கு ஆளான 29 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அகமட் சுக்ரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்