வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், Senai Utara முதல் Serdenak வரையில் தற்போது உள்ள நான்கு வழித்தடங்கள், 6 தடங்களாக அகலப்படுத்தப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.
இதற்கான நிர்மாணிப்புப்பணி இவ்வாண்டு ஜுன் மாதம் தொடங்கும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமது தெரிவித்துள்ளார். முதல் கட்ட நிர்மாணிப்புப்பணி 21.8 கிலோமீட்டர் தூரம் வரை மேற்கொள்ளப்படும். இந்த நிர்மாணப்புப்பணி முடிவடைவதற்கு கிட்டத்தட் 36 மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.