நஜீப் வழக்கை விசாரணை செய்வதற்கு 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internasional லஞ்ச ஊழல் வழக்​கை விசாரணை செய்வதற்கு உயர் நிதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர் என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டிற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் நகல் தற்போது ச​மூக வலைத்தளங்களில் கசிந்துள்ள வேளையில் நஜீப் வழக்கை விசாரணை செய்வதிலிருந்து ​மூன்று ​நீதிபதிகள் நிராகரித்தப் பின்னரே அவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கசாலி விசாரணை செய்வதற்கு முன் வந்ததாக அந்தக் கடி​தத்தில் கூறப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS