பள்ளி மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் உட்பட எந்தவொரு தரப்பினரும் ஈடுபடுவதற்குத் தடையேதும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்துள்ளார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுயின்றி அனைவரும் பள்ளியின் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்படவும், பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதேபோன்று அரசாங்க சார்ப்பற்ற அமைப்புகளும் பள்ளி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை ஏதும் இல்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.