ஜோகூர் மாநிலத்தில் பூர்வகுடி மக்களின் நிலங்கள், பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவதைத் தவிர்க்கவும், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதைத் தடுக்கவும் அந்த நிலங்கள் சுல்தானின் நிலங்களாக மாற்றுவதற்கு மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான்,சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் முன்வைத்த யோசனைக்கு ஜோகூரைச் சேர்ந்த பூர்வகுடி தலைவர் ஒருவர் உடன்படவில்லை.
தங்களின் மூதாதையர் நிலங்கள், தேசிய நில சட்டம் மற்றும் பூர்வகுடி சட்டம் ஆகியவற்றின் கீழ் இருப்பது மேலும் பாதுகாப்பானது என்று ஜோகூர் பூர்வகுடி கிராமத்தின் தலைவர் டோலா தெகோய் தெரிவித்துள்ளார். தங்களின் நிலங்கள் தொடந்து நடப்பு சட்டத்தின் கீழ் இருப்பதையே தாங்கள் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.