வேலை நிறுத்தத்தில் ஈடுப்படவில்லை

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள், இன்று திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில், மறியல் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்த போதிலும், ஜொகூர் மாநிலத்தின் எந்தவொரு மருத்துவமனையிலும் வேலை நிறுத்தம் நடைபெறவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.

வரும் புதன்கிழமை வரை இந்த மறியல் நடவடிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், ஜொகூர் மாநிலத்தில் 12 மருத்துவமனைகளில் செயலாக்கம் தங்குத் தடையின்றி சுமூகமாக நடைபெற்றதாக லிங் தியன் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS