வங்கிக் கணக்கில், நாளை மறுநாள் சேர்க்கப்படும்

வருமானம் குறைந்தவர்களுக்கான brim வடிவிலான ரஹ்மா ரொக்க நிதி உதவியின் இரண்டாம் கட்ட உதவித்தொகை, நாளை மறுநாள் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம், பி40 தரப்பைச் சேர்ந்த 87 லட்சம் பேர் ரொக்க உதவித் தொகையைப் பெறவிருக்கின்றனர்.
இதற்காக அரசாங்கம் 126 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
40 லட்சம் குடும்பத் தலைவர்கள் தலா 200 வெள்ளியையும், திருமணமாகாத 35 லட்சம் பேர் தலா 100 வெள்ளியையும், திருமணமாகாத மூத்தக் குடிமக்கள் 12 லட்சம் பேர் தலா 100 வெள்ளியையும் பெறுவர் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS