‘Captainsmok3r’ என்று தன்னை அடையாளம் கூறிக்கொண்ட தனி நபர் ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறையின் அதிகாரத்துவ அகப்பக்கத்தில் ஊடுருவிய போதிலும், தரவுகள் ஏதும் கசியவில்லை என்று அவ்விலாகா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
எனினும், குடிநுழைவுத்துறை ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக எந்தவொரு தகவலையும் களவாட முடியவில்லை. அவர்களின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ விளக்கினார்.