சில தரப்பினர் தங்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்தற்கும், அதனை தற்காத்துக்கொள்வதற்கும் மலாய்க்காரர்கள் ஒன்றுப்படுவதை வேண்டுமென்றே விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது குற்றஞ் சாட்டினார்.
சம்பந்தப்பட்ட தரப்பின்ர தங்களின் அரசியல் நலனை தற்காத்துக்கெள்வதறகு இது போன்ற முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால் மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடியும் என்று அவர் எச்சரித்தார்.
மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடாடுவதைப் போல அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்கும், போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அவர்கள் நிராகரித்தே வருவார்கள் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
எனினும் இது போன்ற முயற்சியில் ஈடுபடும் தரப்பினரின் பெயரை துன் மகாதீர் வெளியிடவில்லை.