முன்னாள் உள்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதீனின் மகன், சமையல் எண்ணெய் உதவித் தொகை தொடர்பில் பொய்யான தகவல் வழங்கியதாக சிரம்பான் செஷன்ஸ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளரான ஹம்ஸா ஸைனுதீனின் 39 வயது மகன் ஃபைசால் ஹலீம், ரிம்பா மெர்பாதி எஸ்.டி.என். பி.எச்.டி என்ற நிறுவனத்தின் இயக்குநர் 55 வயதான அஸிஸுல் அப்துல் ஹலிமுடன் இணைந்து உள்ளூர் வியாபாரிகளிடம் சமையல் எண்ணெய் விற்பனை தொடர்பில் பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்து மோசடி புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிம்பா மெர்பாதி எஸ்.டி.என். பி.எச்.டி நிறுவனம் என்பது சமையல் எண்ணெய்யை விநியோகிக்கம் மொத்த வியாபார லைசென்ஸைப் பெற்றுள்ள நிறுவனமாகும். முன்னாள் அமைச்சரின் மகனான ஃபைசால் ஹலீம் மீது இரு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் ஃபைசால் ஹலீம் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.