லுமுட் படகுத் துறையில் செயலாற்றி கொண்டிருந்த கனவுந்து ஒன்று கடலில் விழுந்ததால் அதன் ஓட்டுனரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
கனவுந்து கடலில் விழுந்த சம்பவம் தொடர்பாக செதியவான் தீயணைப்ப நிலையத்திற்கு காலை 5.30 மணிக்கு தகவல் கிடைத்தது என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழுவின் நடவடிக்கை குழுத் தலைவர் முகமட் அஸிஸி சக்கரியா கூறினார்.
11 மீட்டர் ஆழத்தில் விழுந்த கனவுந்தை மீட்கும் தொடரப்படுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய வர்த்தகக் கப்பல் அங்கிருந்து நகர்த்தப்பட்டிருன்கின்றது என்று மேலும் குறிபிட்டார்.