60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகினர்

கடந்த ஞாயிற்றுக் கிழமை, நோன்பு திறப்பு நேரத்தின் போது உணவு உட்கொண்ட 60 எம்.ஆர்.எஸ்.எம். மாணவர்கள் உணவு நஞ்சால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அந்த 60 மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி, வயிற்று வழி போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் எம்.ஆர்.எஸ்.எம். கல்வி நிர்வாகம் அவர்களைச் சிகிச்சியகத்திற்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்கி உள்ளனர்.

மாணவர்களுக்கு உணவு நஞ்சு ஏற்பட்டதற்கு ஆயாம் மாசாக் மேரா உணவின் கோழிகள் சமைப்பதற்கு முன்பே நஞ்சு தன்மைக்கு ஆளாகியுள்ளன என தெரிய வந்துள்ளது. இருந்த போதும் எம்.ஆர்.எஸ்.எம் கல்விக்கூடத்தின் சிற்றுண்டி மூன்று நாட்களுக்கு முடக்கி வைப்பதுடன் அங்கிருக்கும் அனைத்து உணவு பொருட்கள் மீது இராசயாண பரிசோதனை மேற்கொள்ளப்பட போவதாக பேராக் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனித வள ஆட்சிக்கு உறுப்பினர் சிவனேசன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS