பள்ளிவாசல்களை எந்தவொரு தரப்பும் அரசியல் களமாக பயன்படுத்தக்கூடாது என்று முஸ்லீம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா நினைவுறுத்தியுள்ளார்.
பள்ளிவாசல்கள் புனிதத்திற்குரிய ஒரு மேன்மையான பரிபாலனமாக முஸ்லீம்கள் தற்காக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.
பிற மதத்தினருக்கு, பள்ளி வாசல்கள் ஒரு முன்னுதாரண வழிப்பாட்டுத் தலமாக விளங்கிடச் செய்ய வேண்டும் என்று முஸ்லீம்களை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
இன்று மலாக்கா, பாசாங்கில் நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மாமன்னர் இந்த அறைக்கூவலை விடுத்துள்ளார்.