பூர்வக் குடி மக்களின் நிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அந்த நிலங்கள் சுல்தானின் நிலமாக கையகப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim முன்வைத்துள்ள பரிந்துரை, ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டதாகும் என்று ஜொகூர் மந்திரி பெசார் onn hafiz gazhi தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெயர் மாற்றம் காண்பது மூலம் அந்த நிலங்கள், ஜொகூர் சுல்தானுக்கு உரிமையாகாது. மாறாக சுல்தானின் நிலங்களாக அவை கையகப்படுத்தப்படுவது மூலம், அந்த விளை நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவது தடுக்கப்படும் என்று மந்திரி பெசார் onn hafiz விளக்கமளித்துள்ளார்.