வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுப்பயணிகளின் விருப்பமான சுற்றுலா தளமாக விளங்கும் மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை மலாக்கா மாநில அரசு வரைவகுக்கும் என்று அம்மாநிலத்தில் முதல்வர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ தெரிவித்தார்.
மலாக்கா நகராட்சி மன்றத்திடம் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளையும் திட்டங்களையும் வகுத்து தர கோரி தாம் கேட்டு கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் உல்லாசமாக எந்தவொரு மன உளைச்சலுக்கும் ஆளாகமல் தங்களின் விடுமுறைகளை கழிப்பதற்கு மாநில அரசாங்கம் வழி வகை செய்யும் என மலாக்கா முதல்வர் கூறினார்.