சிகிரெட் மற்றும் vape போன்றவற்றைப் புகைக்கும் 15 லட்சம் பேரில், 43,360 பேர், மாணவர்கள் என்று வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி nv. subarau தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே கவலை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், தங்கள் பிள்ளைகள் nicotine னை உள்ளடக்கிய vape புகைப்பது குறித்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், இதுவரையில் 10 புகார்களைப் பெற்றுள்ளதாக சுபராவ் குறிப்பிட்டார்.
புகைப்பிடிக்கும் மாணவர்களில், 43 ஆயிரம் பேர் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 341 பேர் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.