கடப்பிதழ் விவகாரம், மே 17 ஆம் தேதி முடிவு

பெர்சத்து கட்சியின் CIMB மற்றும் Ambank வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முகைதின் யாசினின் அனைத்துலக கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பில் அக்கட்சி தொடுத்துள்ள வழக்கில் வரும் மே 17 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

இரு வங்கிகளின் கணக்குகள் முடக்கப்பட்டது மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் முகைதீன் யாசின் கடப்பிதழ் பிடித்தம் செய்யப்பட்டது ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தரப்பினர் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெர்சத்து கட்சி தமது வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிற்கு எதிராக பெர்சத்து கட்சி இந்த வழக்கை தொடுத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS