பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுதந்திரம்

சட்டத்திருத்த மசோதா இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுவதோடு, அவர்கள் சொந்த நிதிகளை நிர்வகித்து, எந்தவொரு செயலையும், திட்டத்தையும் பொறுப்புடன் வழிநடத்த ஒரு தூண்டுகோலாக இருப்பதற்கு, 1971 பல்கலைக்கழக சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது என்று உயர்க் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நூர் டின் தெரிவித்தார் .

இந்தச் சட்டத் திருத்தத்தின் முதல் வாசிப்பு, இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்று மேலவையில் காலிட் நூர் டின் குறிப்பிட்டார்.

வரையப்பட்ட இந்த 1971 பல்கலைக்கழக சட்டத் திருத்தம், ஒப்புதலுக்காக, வரும் ஜூன் மாதம் சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் காலிட் நூர் டின்தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS