மலேசியாவில் மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை நடைபெற்று வருவது உறுதி என்றால், அதனை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உடல் உறுப்புகள் வாங்கி விற்கும் நடவடிக்கை உண்மை என்றால் அவர்களை ஆள் கடத்தல் மற்றும் உறுப்புகள் கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.
ஒருவர் தானாக முன்வந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து அதனை முறையாக மருத்துவமணைகளில் பதிவு செய்தலே சரியான செயல் என்றும் பணத்திற்காக கட்டாயப்படுத்தல் தவறு என நோர் இசாம் சுட்டிக்காட்டினார்.