ஒழுக்கக்கேடு இளம் ஜோடி கைது

பொது இடத்தில் காருக்குள் ஒழுக்கக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் ஓர் இளம் ஜோடியினரை, இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஜொகூர் பாரு, மஜீஸ்திரேட் நீதிமன்றம், போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில், 22 மற்றும் 17 வயதுடைய அந்த காதல் ஜோடியினர் காருக்குள் இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் போது, அந்த இளம் காதல் ஜோடியினர் போலீசாரிடம் பிடிப்பட்டதுடன், அவர்களின் சிவப்பு நிற பெரொடுவா அஃசியா கார் மற்றும் வெள்ளை நிற டீ சட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS