கோவிட் 19 இன்னமும் கட்டுப்பாட்டில் இருக்கிறது

நாட்டில் கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்த போதிலும், அந்த தொற்று நோய், பள்ளிகளில் இன்னமும் கட்டப்பட்டில் இருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளின் உடல் நிலையை அணுக்கமாக கண்காணித்து வரும்படி ஆசிரியர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குதல், மாணவர்களைத் தனிமைப்படுத்துதற்கான தனி அறைகள், ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பு உட்பட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி அளவில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் விளக்கினார்.

எனினும் மாணவர்களுக்கான உடல் வெப்ப சோதனை, அதன் அவசியத்திற்கு ஏற்ப பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS