முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுதலை செய்வது தொடர்பாக, கையெழுத்து வேட்டை ஒன்று தொடங்கப்பட்டுள்ள வேளையில், அவரை விடுவிக்ககூடாது என்று மற்றொரு கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நஜீபிற்கு, மாமன்னர் அப்துல்லா அரச மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரி தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து வேட்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், நஜீபிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கூடாது என்று கோரி தொடங்கப்பட்டுள்ள மற்றொரு கையெழுத்து வேட்டையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.