கார் ஒன்று வேக் கட்டுப்பட்டை இழந்து சாலையோர விளம்பரப் பலகையை மோதி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் பத்து பஹாட், ஆயர் ஹீதாம் அருகில் ஜாலான் பாரெட் போத்தா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இதில், புரோட்டோன் வீரா காரில் பயணித்த 21, 22 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் டொல்லா தெரிவித்தார்.
அந்தக் கார், பாரெட் தெங்ஹா – பாரெட் ராஜா விலிருந்து ஆயர் ஹீதாமை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, இவ்விபத்து நிகழ்ந்தது.