முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது 22 ஆண்டு காலம் பிரதமராக இருந்த பொது, தம்மையும், தமது குடும்பத்தினரிரையும் மிகப்பெரிய செல்வந்தர்களாக உயர்த்திக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துன் மகாதீர் சட்டத்திற்கு புறம்பாக செல்வத்தைக் குவித்து இருப்பாரேயானால் அது குறித்து எஸ்.பி.ஆர்.எம். மிடம் தாராளமாக புகார் செய்யலாம். ஆனால், அது குறித்து பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அன்வார், எஸ்.பி.ஆர்.எம். மிடம் புகார் செய்யாதது ஏன் என்று சமூக நல ஆர்வலர் குவா கியா சூங் கேள்வி எழுப்பியுள்ளார்.