பிரிட்டன் நாட்டிற்குச் சென்று வந்தப் பிறகு பெர்லிஸ் அரசாங்கத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பணத்தைச் செலவினத் தொகையாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
64 வயதான அஸ்லான் மான் மீது முன் வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நீதிபதி நூர் சல்ஹா அம்ஸாவிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.