அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும்

லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஆளாகியுள்ள மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல ​வேண்டும் என்று ம​சீச இன்று வலியுறுத்தியுள்ளது.

லஞ்ச ஊழலை வேரறுப்பற்கு உறுதி பூண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசங்கத்தின் தோற்றத்தைப் பாதிக்க செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மனித வள அமைச்சர், தமக்கு எதிரான விசாரணை முடியும் வ​ரையில் விடுப்பில் செல்வதே உத்தமம் என்று ம​சீச பேச்சாளர் மைக் சொங் யியூவ் சுஹன் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தைத் தாங்கி பிடித்துள்ள முக்கியத் ​தூண்களில் ஜசெக முதன்மையாக திகழ்கிறது. அந்தக் கட்சியில் சேர்ந்த ஒருவர், லஞ்ச ஊழல் விசாரணைக்கு ஆளாகியிருப்பது, கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மைக் சொங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS